Murugan (முருகன்)

Kandha Sasti Kavasam Tamil Lyrics | கந்த சஷ்டி கவசம் | Murugan Song Lyrics

Kandha Sasti Kavasam Tamil Lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்:

Song Details:

Album Kandha Sasti Kavasam
SongSastiyai Nokka Saravana Pavanaar
Singer’s Rajalakshmi and Jayalakshmi (Soolamangalam Sisters)
Lyricist Devraya Swamigal & Tadaga ilamuruga
MusicDevaraya Swamigal
Release2004
Kandha Sasti Kavasam Tamil Lyrics, kandha Sasti Kavasam, kandha Sasti Kavasam song download, kandha Sasti Kavasam video

துதிப்போர்க்கு வல்வினைபோம்…துன்பம்போம்

நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும்

நிமலலருள் கந்தர் சஷ்டி கவசம் தனை

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணி சதங்கை

கீதம் பாட கிண்கிணி யாட

சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணி சதங்கை

கீதம் பாட கிண்கிணி யாட

மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில்வேலால் எனைக் காக்க வென்று வந்து

வரவர, வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிறநிறென

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிறநிறென

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை யாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசங் குசமும்

பரந்தவிழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரை யுங்கிலியும்

கிலியும்சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஆறுமுகமும் அணிமுடி யாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்னம் பதித்த நற்சீராவும்

இருதொடையழகும் இணை முழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக

மொகென.நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வா

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோத னென்(று)

என்றனை யாளும் ஏரகச் செல்வா

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோத னென்(று)

உன்திருவடியை உறுதியென் றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல், வயிற்றை விளங்குவேல் காக்க

சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வடிவேல் காக்க

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின் கை இரண்டும் பின்னவள் இருக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின் கை இரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல‌

வல்ல பூதம் வலாஸ்டிகப் பேய்கள்

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல‌

வல்ல பூதம் வலாஸ்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்‌

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்ச தரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட‌

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்‌

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்‌

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்‌

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட‌

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட‌

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட‌

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட‌

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கை கால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி‌

தணலெரி தணலெரி தணலதுவாக

விடுவிடு வேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட‌

தேளும் பாம்பும் செய்யான் பூரான்‌

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்‌

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயங் குன்மம் சொக்கு சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்து அரணை பரு அரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீயெனக் கருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீயெனக் கருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகவும்‌

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருகா அமராவதியை

காத்து தேவர்கள் கடுஞ்சிறைவிடுத்தாய்

கந்தா குகனே கதிர் வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனிய வேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநி பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

பழநி பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப்பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனை

பாடினேன்‌ ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை‌

நேசமுடன்யான் நெற்றியில் அணிய

பாசவினைகள் பற்றது நீங்கி‌

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க‌

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க‌

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க‌

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்‌

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்‌

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்‌

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து

மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந்தருளி

தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகி

கந்தர் சஷ்டிக் கவசம் இதனை

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்‌

ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு

ஓதியே செபித்து உகந்து நிறணிய

அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்

ஓதியே செபித்து உகந்து நிறணிய

அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்

கந்தர் கை வேலாம் கவசத் தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிபொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலெக்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாக

சூரபத்மாவை துணித்த கையதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமுதளித்த

குருபரன் பழனி குன்றினில் இருக்கும்

சின்ன குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத்தாட்கொள்ள என்றனதுள்ளம்

மேவிய வடிவறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்ய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக் கோரரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

சரணம் சரணம் சண்முகா சரணம்